Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய பொங்கல் விழா; கிடா வெட்டி ... பல்லடம் விநாயகர் கோவில் உண்டியல் மாயம்; போலீசார் விசாரணை பல்லடம் விநாயகர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே 1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
செஞ்சி அருகே 1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

01 அக்
2024
03:10

செஞ்சி; செஞ்சி அருகே 1200 ஆண்டு பழமையான தவ்வை சிற்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.  செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் செங்குட்டுவன், செஞ்சி வாசுதேவன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள பச்சையம்மன் கோவிலில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். 

இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது: அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோவிலில் காளி சிலை உள்ளது. இந்த சிற்பத்தை ஆய்வு செய்ததில், சிற்பம் மூத்ததேவி என அழைக்கப்படும் தவ்வை சிற்பம் என தெரியவந்தது. இந்த சிற்பத்தை வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கின்றனர்.  திண்டின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக்குடத்தின் மீதும் வைத்திருப்பது போன்று உள்ளது. சிற்கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும் இடையில் மேகலையுடனும் காணப்படுகிறது.  வலது பக்கத்தில் காக்கையும் இடது பக்கத்தில் துடைப்பமும் உள்ளன. தவ்வையின் வலது புறத்தில் மகன் மாந்தன் வலது காலை தொங்கவிட்டு இடது காலை குத்திட்டும், இடது புறத்தில் மகள் மாந்தி வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடக்கியும் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றனர். வலது காலடிக்குக் கீழே பெண் அடியவர் ஒருவர் அமர்ந்திருப்பது அரியதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். இந்தத் தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமையானது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar