Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் ... புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர் புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்; பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்; பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
12:10

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. சக்தி கொலுவில் அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் நேற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, நிருத்தியம் நடனம் மற்றும் இசைப்பள்ளி மாணவர்களின் கச்சேரி நடந்தது. இரவு, மாஸ்டர் அபிநவ் மகேசின் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகனின் பக்தி இசைக் கச்சேரி நடந்தது.


மேலும், அம்மன் கொலு சன்னிதியில், அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2.5 முதல் 3.5 வயது வரை உள்ள இளம் தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நம் பாரம்பரிய முறையில், தட்டில் நெல் கொட்டி, அதில் குழந்தைகளின் பிஞ்சு விரலை பிடித்து, அனா... ஆவன்னா... எழுத வைப்பது, சரஸ்வதியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும். பாரம்பரிய முறையை வழுவாமல், குழந்தைகளை படிக்க வைப்பதற்கு, தினமலர் இந்த முறையை ககடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar