Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ... மரக்கன்று நட தோண்டி குழிக்குள் இருந்து வந்த அம்மன் சிலை, சூலாயுதம்; பக்தர்கள் பரவசம் மரக்கன்று நட தோண்டி குழிக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 அக்
2024
01:10

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.


இந்நிலையில், ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதிகாலை, 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழி தரிசனத்தில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தேர்வீதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருக பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். இதே போல 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்தனர். நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar