பதிவு செய்த நாள்
19
அக்
2024
04:10
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத கிருத்திகை விழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, சரவண பொய்கையில் நீராடி, காவடிகள் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.