சேவுகமூர்த்தி அய்யனார், தல்லம்பாரி கருப்பர் மந்தை கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 03:10
மேலுார்; மேலுார் 18 பட்டி கிராமத்தை சேர்ந்த சொக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சேவுகமூர்த்தி அய்யனார், தல்லம்பாரி கருப்பர் மந்தை கோயில் வீடு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். அக். 18 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்காம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் நொண்டிகோவில்பட்டி, புதுசுக்காம்பட்டி மேலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.