ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்; 24ம் தேதி திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2024 10:10
ஹாசன்; ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. ஹாசனின் ஹாசனாம்பா கோவில் உள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படுவது வழக்கம். நாளை மறுதினம் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. நாளை மறுதினம் முதல் நவம்பர் 3 வரை, ஹாசனாம்பா உற்சவம் நடக்கவுள்ளது. மாவட்ட கலெக்டர் சத்தியபாமா கூறியாதவது: ஹாசனாம்பா உற்சவத்தை, எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல முறையில் வெற்றிகரமாக நடத்துவது குறித்து, ஏற்கனவே அதிகாரிகளுடன் பல சுற்று ஆலோசனை கூட்டம் நடத்தி உத்தரவிடப்பட்டது. ஹாசனாம்பா, சித்தேஸ்வர சுவாமி உற்சவத்துக்கு வரும் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல், நடவடிக்கை எடுத்துள்ளோம். இம்முறை வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது. இம்முறை உற்சவத்தை துவக்கி வைக்க, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சித்தகங்கா மடத்தின் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். உற்சவத்துக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரலாம். தற்போது இறுதிகட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. மின் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. சாலைகளுக்கு தார் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மோர் வசதி செய்யப்படும். இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பொறுப்பை, பல்வேறு அமைப்புகள் ஏற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.