திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை அடுத்த மேல கருங்குளத்தில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது. அங்கு அம்மன், சிவலிங்கம் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் கடந்த 19ம் தேதி இரவு கதவை சேதப்படுத்தி சிலர், உள்ளே புகுந்து அம்மன் மண் சிலையை உடைத்து சேதப்படுத்தினர்; மற்றொரு அம்மன் கற்சிலையை உடைத்தனர். மேலும், 20ம் தேதி இரவு கோவிலுக்குள் புகுந்தவர்கள் உடைக்கப்பட்ட அம்மன் கற்சிலையின் தலைப்பகுதி, லிங்கத்தையும் திருடிச் சென்றனர். கோவிலில் அடுத்தடுத்து கும்பல் நுழைந்து சிலைகளை உடைத்து திருடியதால் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர்.கோவில் முன் நேற்று பொதுமக்கள் திரண்டனர். சிலைகளை உடைத்து திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.