பல்லடம்; பல்லடம் கடைவீதியில், பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரும் டிச.,5 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை 9.15க்கு துவங்கியது. முன்னதாக, சிறப்பு வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, காமாட்சிபுரம் ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் முகூர்த்தக்கால் நட்டார். பொன்காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.