மானாமதுரை; மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் உள்ள பூர்ணகலா, புஷ்கலா சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று கடந்த செப்.8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைக்காக தினம் தோறும் மாலை கோயிலில் அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும் கோயிலின் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் பால், சந்தனம், தயிர், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானமும், மாலை திருவிளக்கு பூஜையும்,இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பிடாவூர்,குலக்கட்டபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.