பதிவு செய்த நாள்
26
அக்
2024
02:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவிலில் உள்ள பொது உண்டியல், திருப்பணி உண்டியல், கோசாலை உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வர் திலகவதி ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன. இதில், 35 லட்சத்து, 20,166 ரூபாய் ரொக்கமும், 14 கிராம் தங்கமும், 157 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்தார்.
அஷ்டபுஜ பெருமாள்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில், கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன. இதில், 3 லட்சத்து 74,241 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.