Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... பயன்பாட்டிற்கு வராத திருச்செந்துார் கோயில் தங்கும் விடுதி; தனியார் விடுதிகளை நாடும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கோவில் கட்டும் சுதா மூர்த்தி; சிறுவயது கனவு நிறைவேறுவதாக நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கோவில் கட்டும் சுதா மூர்த்தி; சிறுவயது கனவு நிறைவேறுவதாக நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 அக்
2024
12:10

பெங்களூரு: தமிழகத்தில் உள்ள குக்கிராமத்தில் கோவில் கட்டுவதற்கு, ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இவாநல்லூர் கிராமத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உள்பட பல்வேறு கடவுள்களின் பழமையான சிலைகளை, சிறுசிறு குடிசைகளில் வைத்து, அந்த கிராமத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர்.முறையான கட்டுமானங்கள் இல்லாமல் கோவில்கள் இருப்பதைக் கண்டு மனம் வாடிய கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி, இவாநல்லூரில் தனது சொந்த செலவில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிறுவயதில் எனது தாத்தா, நிறைய விஜயநகர பேரரசின் கதைகளை சொல்லுவார். கல்வியை போதித்தல், பிறருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தல், குளங்கள், கோவில்கள் கட்டுவது உள்ளிட்டவை செய்தால் தான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடையும் என்று அறிஞர்கள் சொல்லுவர்கள். கோவில்கள், குளங்களை மறுசீரமைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதால், புதிதாக கோவிலை கட்ட மறந்து விட்டனர். தற்போது, இவாநல்லூரில் கோவில் கட்டுவதன் மூலம், எனது ஆசை நிறைவேறியது, எனக் கூறினார். மேலும், தமிழக கிராமங்களில் பழமையான கடவுள் சிலைகள் இருப்பதாக நண்பரின் மூலம் தெரிந்து கொண்டதாகவும், இவாநல்லூரில் 18 மாதங்களுக்குள் சொந்த செலவில் கோவிலை கட்டி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடந்த கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டதாகவும், பாரம்பரிய கலாசாரம் முறைப்படி கோவிலில் அனைத்து சடங்குகளும் செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம், : எத்தனையோ அழிவு முயற்சிகள் நடந்தாலும் இன்றும் சனாதன வைதீக தர்மம் நிலைத்து நிற்பதற்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் ஜென்ம தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில், பாகம்பிரியாள் உடனுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar