Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டுவன யாவும் தரும் கந்தசஷ்டி ... சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்..! சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு ...
முதல் பக்கம் » துளிகள்
கந்தசஷ்டி விரத நாட்களில் எங்கு வழிபட என்ன பலன் கிடைக்கும்?
எழுத்தின் அளவு:
கந்தசஷ்டி விரத நாட்களில் எங்கு வழிபட என்ன பலன் கிடைக்கும்?

பதிவு செய்த நாள்

01 நவ
2024
01:11

கந்தசஷ்டி விரதநாட்களில், முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசித்தால் செல்வவளம் பெருகும். சூரசம்ஹாரத் தலமான திருச்செந்தூரில் கந்தவேலைத் தரிசித்தால் எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். ஞானபண்டிதனான தண்டாயுதபாணியை பழநியில் வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த சுவாமிநாதனைச் சுவாமிமலையில் தரிசித்தால் கல்வி அபிவிருத்தி உண்டாகும். வள்ளிநாயகியை மணந்தருளிய திருத்தணியில் தணிகைநாதனை வணங்கிவந்தால் திருமணத்தடைகள் நீங்கும். திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் மனநிறைவுடன்  வாழ்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.. ஆறாவது படைவீடாகிய சோலைமலை முருகப்பெருமானைத் துதித்தால் தடைபட்டுவந்த செயல்கள் நிறைவேறும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம், ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகும். மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகப்பெருமான், இங்கு மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு நேரடியாக அபிஷேகம் கிடையாது. அவரது திருக்கரத்திலுள்ள வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. முருகப்பெருமானுக்கு தெய்வானையுடன் இங்கு தான் திருமணம் நடந்தது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் வரும் படைவீடு இதுவே! காயத்ரி, சாவித்திரி, சித்த வித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் முருகன் சன்னதியில் காட்சி அளிக்கின்றனர். அவரது திருவடியின் கீழ், அண்டராபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். மகாபாரதம் எழுதிய வியாசரும் தனிச் சன்னதியில் காட்சிதருகிறார்.  இந்த தலத்துக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசர தலம், குமாரபரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம் என்னும் புராணப் பெயர்கள் உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar