Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ... திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவக்கம்

பதிவு செய்த நாள்

02 நவ
2024
06:11

சென்னை; பழனிக்கு நிகராக சென்னை மாநகரில், வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா, இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை மேல் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானின் அருளைப் பெற்றனர். விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. விழாவின் பிரதான நாளான 7ம் தேதி காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதைyfதொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. நவ., 12ம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

குன்றத்துார் முருகன் கோவில்; குன்றத்துார் மலை குன்று மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை கந்தபுராண பாராயணம் நடந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 7ம் தேதி நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தேனுபுரீஸ்வரர் கோவில்; மாடம்பாக்கத்தில் பிரசித்திப் பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அருணகிரி நாதரால் பாடல்பெற்ற சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி விழா, நேற்று துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஆறாம் நாளான நவ., 7ம் தேதி, 108 பால்குட அபிஷேகம் வெங்கிளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேனுபுரீஸ்வரர் கோவிலை வந்தடைகிறது. அன்று இரவு 7:30 மணிக்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது. கடைசி நாளான, நவ., 8ம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar