Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ... கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் ரூ.5.40 கோடியில் திருமண மண்டபம் கொண்டத்து காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.1.79 கோடி வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.1.79 கோடி வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு

பதிவு செய்த நாள்

13 நவ
2024
03:11

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பவானி ஆற்றில் படித்துறை, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், சேவார்திகள் தங்கும் விடுதி ஆகியவை, ஒரு கோடியே, 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய கட்டடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பக்தர்கள் காணிக்கை, கடைகளின் வாடகை வாயிலாக, பல கோடி ரூபாய் நிதி கிடைத்தவுடன் சேர்க்கிறேன் வருவாய் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தற்போது கோவில் வளாகத்தில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், முடி காணிக்கை மண்டபம், நாகர் சன்னதி, மதில் சுவர், பவானி ஆற்றில் படித்துறை, கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள், சேவார்திகள் தங்கும் விடுதி ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக, 62 லட்சம் ரூபாய் செலவில் பவானி ஆற்றில் படித்துறையும், 42 லட்சம் ரூபாய் செலவில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளும், 22 லட்சம் ரூபாய் செலவில் சேவார்திகள் தங்கும் விடுதியும், 53 லட்சம் ரூபாயில் மூன்று இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என, மொத்தமாக, ஒரு கோடியே, 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல செயற்பொறியாளர் ரேவதி முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவி, ஹிந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மற்றும் சண்முகசுந்தரம், சுரேந்திரன், கல்யாணசுந்தரம் உட்பட அரசு அதிகாரிகள், பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் தாலூகா ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar