Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் டிச., ... உணவின்றி உயிரில்லை.. உயிரின்றி உலகில்லை; ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் உணவின்றி உயிரில்லை.. உயிரின்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் சித்தி விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நத்தம் சித்தி விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
12:11

திண்டுக்கல்; நத்தம் அருகே ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சீரங்கம்பட்டியில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா  நடந்தது. இதில் முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் லெட்சுமி ஹோமம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி மற்றும் முதல் காலயாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து  யாகசாலையில் சதுர்த்தி வார பூஜைகள், இரண்டாம்  கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம்  செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் நத்தம், சீரங்கம்பட்டி, அய்யாபட்டி, காத்தாம்பட்டி, ஊராளி பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar