Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வேணு கோபாலசுவாமி கோயிலில் ... நத்தம் சித்தி விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் நத்தம் சித்தி விநாயகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் டிச., 12ல் கும்பாபிஷேகம்; சுவாமிகளுக்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் டிச., 12ல் கும்பாபிஷேகம்; சுவாமிகளுக்கு பாலாலயம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
12:11

பொள்ளாச்சி; ஆனைமலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கடந்த, 2010ம் ஆண்டு டிச., 12ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் நிறைவடைந்து, 14 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.


சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. இதை தொடர்ந்து, 65 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் திருப்பணி நடக்கிறது. மற்ற பகுதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது. அதில், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில், 20 பேர் பங்கேற்று யாக சாலை பூஜைகள் செய்தனர். கலசங்கள் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் கோவில் அருகே அத்தி மர பலகையில் சுவாமி சக்திஏற்றப்பட்டது. இதில், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணிகள் மொத்தம், 2 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கும்பாபிஷேகம் வரும் டிச., 12ம் தேதி காலை, 9:00 மணி முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கான பாலாலயம் நடந்தது. இதையடுத்து, சக்தி ஏற்றப்பட்ட அத்தி மரத்திலான சுவாமிகள், விநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிேஷகம் வரை அங்கு தான் பூஜைகள் நடத்தப்படும். கும்பாபிஷேகம் நடந்ததும், மூலவர் சன்னதி வழக்கம் போல திறக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar