Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்ல கார்த்திகையில் விரதம் ... சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு சபரிமலை செல்லும் அய்யப்ப ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு.. நெய் அபிஷேகம் துவங்கியது; சரண கோஷத்துடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு.. நெய் அபிஷேகம் துவங்கியது; சரண கோஷத்துடன் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
07:11

சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று நெய் அபிஷேகம் துவங்கியது.

கார்த்திகை 1 ம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலம் என அழைக்கப்படுகிறது. 41 வது நாள் மண்டல பூஜை நடக்கும். இன்று (நவ.,16) துவங்கும் மண்டல காலத்துக்காக நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.

திருநீறு பிரசாதம் வழங்கல்; தொடர்ந்து 18 படிகளின் கீழ்பகுதியில் இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள் சபரிமலை அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து அழைத்து கொண்டு ஸ்ரீ கோயில் முன் வந்தனர். இருவருக்கும் திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரிக்கு தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி ஐயப்ப மூல மந்திரத்தை சொல்லிக் கொடுத்து ஸ்ரீ கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதுபோல மாளிகைப்புறத்திலும் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூரிக்கு அபிஷேகம் நடத்தி தேவி மூல மந்திரம் சொல்லிக் கொடுத்து ஸ்ரீ கோயிலுக்குள் அழைத்து சென்றார். வேறு விசேஷ பூஜைகள் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நெய் அபிஷேகம் துவக்கம்; இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை பிறந்தார். பின்னர் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார், வழக்கமான பூஜைகள் துவங்கியது.

40 லட்சம் டின்அரவணை ஸ்டாக்; இந்நிலையில் கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் கூறியதாவது: நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை எட்டாயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டாயிரத்து 700 பேர் தங்கும் வகையில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் மருத்துவமனைகளில் பக்தர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மலை ஏறும் போது பக்தர்கள் களைப்பாறுவதற்கு வசதியாக ஸ்டீல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை மற்றும் வெயிலில் இளைப்பாற வசதியாக நவீன ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 லட்சம் டின் அரவணை ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு உடன் இணைந்து தேவசம்போர்டு பக்தர்களுக்காக செய்துள்ள வசதிகள் திருப்தியாக உள்ளது என்றார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar