Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகர் ... 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 நவ
2024
02:11

மேட்டுப்பாளையம்; காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.


காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, அரங்கநாதர் கோவிலின் உப கோவில், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் ஆகும். இது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். கடந்த, 2003ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின், கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட்டன. திருப்பணிகள் முடிந்த பின், 19ம் தேதி வாசுதேவ புண்யாகம், தன பூஜை, வாஸ்து பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அஷ்டதிக் பந்தனம், அங்குரார்ப்பணம், யாக சாலை பிரவேசம், அக்னி பிரதிஷ்டை, முதலாம் கால யாகம், தீபாராதனை, சாற்று முறை ஆகியவை முடிந்து, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.


இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, திவ்ய பிரபந்த சேவை, வேத பாராயணம் சேவை, இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள், மூல மந்திரம், காயத்ரி ஹோமங்கள், நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள், கோவிலின் உள்ளே வலம் வந்து, கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அர்ச்சகர் திருவேங்கடம் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அதைத் தொடர்ந்து சுவாமிகள் மீது புனித தீர்த்தம் தெளித்து, அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar