Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் சாய் சுருதியில் ... சந்தன காப்பு அலங்காரத்தில் காரமடை சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி; பூலாநந்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு 108 குட பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமி; பூலாநந்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு 108 குட பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 நவ
2024
01:11

சின்னமனூர்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு 108 குட பாலாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் யாக வேள்விகளும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக கருதப்படுபவர் கால பைரவர். நாயை வாகனமாக கொண்ட இவர் காசி நகரின் காவல் தெய்வமாகவும், அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்குபவர். சனீஸ்வர பகவானின் நோயை குணப்படுத்தியவர். சனீஸ்வர பகவானுக்கே பைரவர் தான் குரு. எனவே தான் ஏழரை சனி உள்ளிட்ட எந்த சனி பிடித்தாலும் பைரவரிடம் சரணடைந்தால் தொல்லைகள் வராது. தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சிவபெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். சின்னமனூர் சிவகாமியம்மன் உடதுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று 192 வது தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 108 குடங்களில் பால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் யாகபூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று கால பைரவரை வழிபட்டனர். வாழை நாறுகளால் உருவாக்கப்பட்ட உற்சவர் கால பைரவர், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அவர் முன் மகா கால பைரவர் யாகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar