Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் ... திருச்செந்தூர் கடற்கரையில் 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு திருச்செந்தூர் கடற்கரையில் 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார ஹோமம்; 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார ஹோமம்; 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 டிச
2024
05:12

மயிலாடுதுறை; சீர்காழி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம், 1008 சங்கபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. உமையம்மை ஞானப்பால் அளித்ததால் திருஞான சம்பந்த பெருமான் தேவாரத்தின் முதல் பதிகம் அருளிய தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் ஆகியோர் 3 நிலைகளில் மலைக்கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோவிலின் தென்புறத்தில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில்  எழுந்தருளி அருள்பாலிப்பதால் காசிக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. இங்கு வழிபட ஞானம் பெருகி, சகல ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், சட்டம் சார்ந்த பிரச்சனைகள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரம் பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி சன்னதியில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்பட்டு, சங்குகளில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு ஹோமத்தை கோவில் குருக்கள் செய்து வைத்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar