Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் பிரமோற்சவம்; பக்தர்கள் ... கூத்தப்பாக்கம் சர்வ சக்தி விநாயகர் கோவில்  மகா கும்பாபிஷேகம் கூத்தப்பாக்கம் சர்வ சக்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர்கள் கால முருகன் சிலை, கோபுர கலசக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
சோழர்கள் கால முருகன் சிலை, கோபுர கலசக்கல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

05 டிச
2024
03:12

தஞ்சாவூர், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தின் தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறனுக்கு, திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த சாருலதா என்பவர் சிதைந்த நிலையில் சிலைகள், சிற்பங்கள் உள்ளதாக தகவல் அளித்தார்.  அதன்பேரில், மணிமாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லைகோவிந்தராஜன், சக்கராப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.  


இது குறித்து மணி.மாறன் கூறியதாவது: கோரையாற்றின் கிளை ஆறான அரிச்சந்திரா நதியின் வடகரையில், விக்கிரபாண்டியம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரை சோழ, பாண்டிய, நாயக்கர், மராத்திய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக திகழ்ந்துள்ளது. சோழர் மன்னருக்கு பிறகு, பாண்டிய மன்னர்களின் ஒருவரான வீரபாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியனின் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவ்வூரில், முற்றிலும் சிதைந்து போன நிலையில் இருந்த சிவாலயம் உள்ள இடத்தில், புதிய கோவில் அமைப்பதற்காக குழிதோண்டிய போது, சோழர்கள் கால உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நமது ஆய்வில், அங்கு காணப்பட்ட சிற்பங்கள், சிலைகளை ஆய்வு செய்தோம். அதில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த நின்ற கோலத்தில் மிக அழகான முருகன் சிற்பம் ஒன்றும், கோவில் கோஷ்ட மாடப்பகுதியில் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் காணப்படும் சனகாதி முனிவர்களின் சிற்பங்களை அடையாளம் மூலம் கண்டுபிடித்தோம். அத்துடன், முற்கால சோழகர்கள் கோவில் கோபுர கலசக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.  கோவிலுக்கு எதிரே வயல்வெளியில் சோழர் காலத்தைச் சார்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளின் சிறு சிறு உடைந்த துண்டுகளையும் காணமுடிகிறது இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar