திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப திருவிழா ஏழாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் முருகர், விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ராஜகோபுரம் முன் கரும்பு தொட்டில் குழந்தை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 13ல் காலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.