கார்த்திகை செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 11:12
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிற்பபு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் மூலவர் முருகப்பெருமான் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
* கார்த்திகை மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை யொட்டி கோவை என். எச். ரோடு - -டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. இதில் பச்சை வண்ண காப்புடன் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.