Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பனுக்கு தரமான சந்தனம் : ... சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த விரிவான வசதி சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் திருவாபரண பவனி ஆயத்தம் தொடக்கம்; அதிகரிக்கும் பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் திருவாபரண பவனி ஆயத்தம் தொடக்கம்; அதிகரிக்கும் பக்தர் கூட்டம்

பதிவு செய்த நாள்

11 டிச
2024
04:12

நாகர்கோவில்; திருவாபரண பவனிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பந்தளத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. இங்கு திருவாபுரணத்தை கும்பிடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.


ஜன.,14 -ல் சபரிமலையில் மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி ஜன.,12 -ல் புறப்படுகிறது. இந்த பவனியின் முன்னால் பந்தளம் மன்னர் பிரதிநிதி பல்லக்கில் தூக்கிச் செல்லப்படுவார். இதற்காக பல்லக்கு புதுப்பிக்கும்பணி பந்தளத்தில் தொடங்கியுள்ளது. பல்லக்கில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. ஜனவரி 12 மதியம் ஒரு மணிக்கு இங்கிருந்து திருவாபுரண பவனி புறப்படும். இதற்கிடையில் பந்தளம் சிராம்பிக்கல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை வணங்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி தரிசனத்திற்காக திருவாபரண பேடகங்கள் திறந்து வைக்கப்பட்டது. ஜனவரி 11 வரை இந்த அரண்மனையில் பக்தர்கள் தரிசிக்கலாம். 12 அதிகாலை 5:30 முதல் பகல் 12:00 வரை பந்தளம் சாஸ்தா கோயில் வாசலில் திருவாபரணங்களை தரிசிக்க முடியும். ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து கொடுக்கப்படுகிறது. மண்டல மகர விளக்கு காலத்திலும், பங்குனி மாதம் உத்திரம் நாளிலும், சித்திரை விஷுவுக்கும் திருவாபரணங்களை கும்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் ஆய்வு ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar