Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மக்கள் வெள்ளம்: ... திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; சிக்கி தவித்த பக்தர்கள் திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம்

பதிவு செய்த நாள்

13 டிச
2024
02:12

காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் திருமங்கையாழ்வார் வரது திருநட்சத்திரமான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் வைணவ திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கொங்கு நாட்டில் சிறப்பு பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை முடிந்து திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்தி ராமானுஜர் சன்னதியில் எழந்தருளினார். அங்கு விஸ்வக்ஷேனர் ஆவாகனம், லட்சுமி நாராயண ஆவாகனம், புண்யா வசனம், கலச ஆவாகனம், மூலவர் ராமானுஜர் மற்றும் திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்திக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால் தயிர், தேன், நெய், இளநீர்,சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, ரங்க மண்டபத்திலே ஸ்ரீரங்கநாதர் முன் திருமங்கையாழ்வார் எழுந்தருளினார். ரங்கநாதரிடம் இருந்து சந்தன மாலை, பரிவட்ட மரியாதை நடந்தது. பின்னர் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் மற்றும் திருமலை நல்லா சக்கரவர்த்தி ஸ்தலத்தார்கள் தமிழ் வேதமாகிய திவ்யபிரபந்தத்திலிருந்து  திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி பாசுரங்களை சேவித்தனர். பின்னர் ரங்கநாதரிடம் இருந்து சடானரி மரியாதை அளிக்கப்பட்டு திருக்கோவில் வலம் வந்து மீண்டும் ராமானுஜர் சன்னதியை அடைந்தார். பின்னர் உச்சகால பூஜை சற்று முறை சேவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar