Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோயில் கோபுரத்தில் ... அழகர்கோவில் மற்றும் பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம் அழகர்கோவில் மற்றும் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் மழை, திருப்புவனம் திதி பொட்டலில் தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தொடர் மழை, திருப்புவனம் திதி பொட்டலில் தவிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 டிச
2024
08:12

திருப்புவனம்; திருப்புவனம் திதி பொட்டலில் மேற்கூரை இல்லாததால் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கினர். காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் ஆகும், எனவே தென்மாவட்ட பக்தர்கள் பலரும் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க திருப்புவனம் வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்க வந்து செல்கின்றனர். திதி, தர்ப்பணம் வழங்கும் பக்தர்களிடம் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் திருப்புவனம் பேரூராட்சி சார்பில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளிக்கவும், கழிப்பறை வசதிகளும் மட்டும் செய்து தரப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் வைகை ஆற்றங்கரையில் குப்பைகளுக்கு மத்தியில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழை காரணமாக திதி பொட்டல் சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே முன்னேர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர். வைகை ஆற்றங்கரையில் போதிய இட வசதி உள்ள நிலையில் ஆக்ரமிப்புகளை அகற்றி திருப்புவனம் பேரூராட்சி சார்பில் மேற்கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். பல முறை பக்தர்கள் சார்பில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையுடன் வந்து செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் திதி பொட்டலில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar