Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல காலத்தில் ... சபரிமலையில் புல்மேடு, எருமேலி பாதைகளில் வருவோருக்கு இனி தனி வரிசை சபரிமலையில் புல்மேடு, எருமேலி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 29 நாட்களில் 22.67 லட்சம் பேர் தரிசனம் வருமானம் ரூ.163.89 கோடி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 29 நாட்களில் 22.67 லட்சம் பேர் தரிசனம் வருமானம் ரூ.163.89 கோடி

பதிவு செய்த நாள்

16 டிச
2024
11:12

சபரிமலை; ‘‘சபரிமலையில் மண்டல சீசனில் 29 நாட்களில், 22.67 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 163.89 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது,’’ என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.


சன்னிதானத்தில் அவர் கூறியதாவது: சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ளது. அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. போலீசாரின் திட்டமிட்ட செயல்பாடு காரணமாக, 18 படிகளில் பக்தர்கள் வேகமாக ஏற்றப்படுவதால் நீண்ட நேரம் காத்திருப்பில்லாமல் தரிசனம் செய்து திரும்புகின்றனர். கடந்த, 29 நாட்களில் மொத்தம் 22 லட்சத்து, 67,956 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கால அளவில் 18 லட்சத்து, 16,913 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 4.51 லட்சம் பேர் அதிகமாகும். மொத்த வருமானம் 163 கோடியே, 89 லட்சத்து 20,204 ரூபாய். கடந்த ஆண்டு, 141 கோடியே 12 லட்சத்து 97,723 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 22.76 கோடி ரூபாய் அதிக வருமானம் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில், 82 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இது, 17 கோடி ரூபாய் அதிகம். காணிக்கையாக, 52.27 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 கோடி ரூபாய் அதிகமாகும். டிச., 23, 24ல் சபரிமலையில் தேவசம்போர்டு மற்றும் போலீஸ் துறை சார்பில் கற்பூர ஆழி பூஜை நடைபெறும். டிச., 22 காலை 6:00 மணிக்கு ஆரன்முளாவில் இருந்து தங்கி புறப்படுகிறது. டிச., 25 மாலை 6:30க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச., 26-ல் மண்டல பூஜை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar