Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்தூர்பேட்டை சொர்ணகடேஸ்வரர் ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து விழா; ஆழ்வார்களுக்கு தீபாராதனை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனதில் வருத்தமில்லாம் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை
எழுத்தின் அளவு:
மனதில் வருத்தமில்லாம் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
03:01

வடவள்ளி; வடவள்ளி, பிருந்தாவன் ஹில் வியூவில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு மனிதன், தன் வாழ்நாளில் மனதில் வருத்தமில்லாமல் இருப்பதே சாதனை என, ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் தெரிவித்தார்.


வடவள்ளி, லட்சுமி நகரில் உள்ள பிருந்தாவன் ஹில் வியூ சீனியர் சிட்டிசன் ஹோமில், புத்தாண்டு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் கலந்து கொண்டார். இவ்விழாவில், சேஷாத்ரிநாதன் பரத்வாஜ் எழுதிய திருத்தொண்டர்களின் இறையனுபவம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை, சொற்பொழிவாளர் ரமணன் வெளியிட, பிருந்தாவன் ஹில் வியூ நலச்சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிருந்தாவன் ஹில் வியூ குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சொற்பொழிவாளர் ரமணன் பேசுகையில்,"ஒரு மனிதனின் வாழ்வில், முக்கிய சாதனை என்பது, நீங்கள் பெற்ற விருதுகளோ, படித்து பெற்ற பட்டங்களோ, பணமோ இல்லை. நமது மனதில் எந்த வருத்தமும், இதயத்தில் எந்தவிதமான கீறல்களும் இல்லாததே உண்மையான சாதனை. நாமும் எதையும் துரத்தி செல்லக்கூடாது. நம்மையும் எதுவும் துரத்த நாம் அனுமதிக்க கூடாது. இதுதான் சாந்தி. உலகமே நம்மை கைவிட்டாலும், நாம் நம்மை கைவிடாமல் இருப்பது தான் ஞானம். எப்போதும் எது உச்சமாக இருக்கிறதோ அந்த சத்தியத்தின் பெயர்தான் யோகம். அந்த சத்தியம் எப்போதும் என்னுள்ளேயே இருக்கிறது என்ற தெளிவின் பெயர் தான் ஞானம். அந்த சத்தியம் தான் நம்மை காக்க வேண்டும். அதைத்தான் நான் எப்போதும் பணிந்து கொண்டிருக்கிறேன் என்ற பாவனை தான் பக்தி. ஒரு மனிதரையோ, பொருளையோ, சித்தாந்தத்தையோ ஆதாரமாக கொண்டு, அதன் மூலம்தான் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்றால் அது ஆபத்து. ஒரு மனிதன், பொருள், சித்தாந்தம் ஆகியவற்றிற்கு ஆயுள் உண்டு. எதற்கு ஆயுள் உள்ளதோ, அதற்கு பிணி உண்டு, தேய்மானம் உண்டு, மரணமும் உண்டு. அமைதி என்னுடைய இயல்பு, ஆனந்தம் அதன் வெளிப்பாடு என்ற நிலைப்பாட்டில் இருந்தால் எப்போதும், எந்த காரணமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar