Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி ... கோவில்களில் அன்னதான திட்டம் போதிய ஊழியர்கள் இல்லாததால் சிக்கல்! கோவில்களில் அன்னதான திட்டம் போதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவிலில் லட்சார்ச்சனை பூர்த்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2012
11:11

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத ஸ்வாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடக்கும். மேலும் இவ்வாண்டு ராகுபெயர்ச்சி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடப்பதால், இவ்விரு விழாவும் விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. டிசம்பர், 2ம் தேதி ராகுபெயர்ச்சி விழா நடக்கிறது. டிசம்பர், 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாக்களையொட்டி கடந்த, 23ம்தேதி கோவில் வாசல் கொடிமரம் முன்பாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பின் தேர் முகூர்த்தம் நடந்தது. அங்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. டிசம்பர், 2ம் தேதி நடைபெற உள்ள ராகுபெயர்ச்சி விழாவையொட்டி, கடந்த, 26ம் தேதி காலை லட்சார்ச்சனை தொடக்கவிழா ராகுபகவான் சன்னதியில் நடந்தது. முன்னதாக ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, புஷ்பலங்காரம் செய்யப்பட்டது. பின் ராகுபெயர்ச்சி பரிகார லட்சார்ச்சனை துவங்கியது. நேற்று மாலை முதல்கட்ட லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. வருகிற, 3ம் தேதி இரண்டாம் கட்ட பரிகார லட்சார்ச்சனை துவங்குகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி கமிஷனர் பரணிதரன் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar