Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் நாச்சியார் கோவிலில் கல் ... சிருங்கேரியில் வரும் 11ல் பிரம்மாண்டமான ஸ்தோத்ர திரிவேணி பாராயண நிகழ்ச்சி சிருங்கேரியில் வரும் 11ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2025
10:01

திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.  6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சாமி  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 தேதி முதல் 19 ம் தேதி வரை  வைகுண்ட ஏகாதசியையொட்டி சொற்கவாசல்  திறக்கப்பட உள்ளது. இதையொட்டி   கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் 6 மணி நேரத்துக்கு பிறகு பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று  காலை மார்கழி மாத திருபாவை, தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெற்ற பிறகு  ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மீது பட்டு வஸ்திரம் கொண்டு மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூரனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் பூசப்பட்டது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி  6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிருத்தப்பட்டது. தொடர்ந்து, 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, இ ஓ  ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கைய சவுத்ரி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீதர், துணை செயல் அதிகாரி லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar