Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news "மெகா திருவாதிரைக்களி நடனம் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு 32 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத  நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு 32 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2025
07:01

 உத்தரகோசமங்கை; - ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி இன்று காலை 7:00 முதல் 8:30 மணி வரை நடந்தது.

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு வடக்கு பகுதியில் தெற்கு முகமாக பச்சை மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது. ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ அபூர்வ நிகழ்வை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அபூர்வ பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் ஒலி, ஒளியால் பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்படுகிறது. கடந்த ஆண்டு 70 கிலோ சந்தனம் திருமேனியில் பூசப்பட்டிருந்த நிலையில் சந்தனம் படி களையப்பட்டது. இன்று காலை 9:00 மணி முதல் தொடர்ச்சியாக மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனப் பொடி, தேன் உள்ளிட்ட 32 வகை அபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

அபிஷேகம் நிறைவிற்குப் பிறகு மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. இரவு 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு புதிய சந்தனத்தால் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. நாளை  (ஜன.,13) அதிகாலை 2:30 மணிக்கு பிறகு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4:00 மணி முதல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar