Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா கும்பமேளா; குவியும் பக்தர்கள்.. ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பு
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; பச்சை மரகத  நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பு

பதிவு செய்த நாள்

13 ஜன
2025
08:01

உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் தெற்கு முகமாக பச்சை மரகத நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது.


ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ நிகழ்வை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அபூர்வ பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் ஒலி, ஒளியால் பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆண்டு முழுதும் சந்தனம் பூசப்படுகிறது. கடந்த ஆண்டு, 70 கிலோ சந்தனம் திருமேனியில் பூசப்பட்டிருந்த நிலையில் சந்தனம் படி களையப்பட்டது. நேற்று காலை, 9:00 மணி முதல் தொடர்ச்சியாக மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனப் பொடி, தேன் உள்ளிட்ட 32 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அபிஷேகம் நிறைவிற்கு பின், மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. இரவு, 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு, புதிய சந்தனத்தால் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி மண்டபத்தில் நேற்று காலை முதல், பரதநாட்டியம் நடந்தது.


சந்தனம் விலை உயர்வு; கோவிலில் உள்ள கவுன்டரில் கடந்த ஆண்டு சந்தன பாக்கெட்டுகள் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 250 ரூபாய்க்கு தனியாக விற்பனை செய்தனர். விலை உயர்வு குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar