Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ... வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட பூமி பூஜை வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட பூமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
900 ஆண்டுக்கு முற்பட்ட அய்யனார் சிலை பல்லடம் அருகே பொதுமக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
900 ஆண்டுக்கு முற்பட்ட அய்யனார் சிலை பல்லடம் அருகே பொதுமக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
01:01

பல்லடம்; பல்லடம் அருகே, 900 ஆண்டுக்கு முற்பட்ட பழமையான அய்யனார் சிலைக்கு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.


இது குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது: பல்லடத்தை வட்டாரப் பகுதியிகளில் தோழர்கள், பாண்டியர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் என்றும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, கள்ளிப்பாளையம் ஊராட்சி, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் உள்ளது. இது, ஏறத்தாழ, 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.‌ அன்றைய காலத்தில், வணிகர்கள் தாங்கள் பயணிக்கின்ற இடங்களில் வழிபாடு செய்வதற்காக இது போன்ற அய்யனார் சிலைகளை உருவாக்கி வைத்து‌ வழிபாடு செய்து வந்துள்ளனர். இங்குள்ள சிலையும் அது போன்று வணிகர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இங்குள்ள ஏரி அருகே இருந்த இச்சிலையை மீட்டு இப்பகுதி மக்கள் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பழமையான இச்சிலை, இப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு, இன்றுவரை பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.


இச்சிலை உருவானதற்கான கல்வெட்டுகள் எதுவும் இங்கு இல்லை. இதன் அருகிலேயே, விக்ரம சோழ மன்னரால் புனரமைப்பு செய்யப்பட்ட சிவாலயமும் உள்ளது. மேலும், இங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் இதேபோன்று இரண்டு அய்யனார் சிற்பங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனில், பண்டைய காலங்களில், இந்த வழியாக வணிகப் போக்குவரத்து நடைபெற்றதற்கான அடையாளமாக இச்சிலைகள் உள்ளன. முன்னோர்களின் வழிபாட்டு முறைகளை போற்றுவதாக உள்ள இச்சிலைகளை மீட்டு பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar