Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடுங்கலுார் பகவதியம்மன் கோவிலில் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.54 லட்சத்தில் கோசாலை காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.54 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்டபம்; பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்டபம்; பக்தர்கள் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

22 ஜன
2025
10:01

இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த விழாவின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்திருந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் உள் பிரகாரத்தில் மண்டப வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேகத்திற்கு கூட ஹிந்து சமய அறநிலைத்துறை நிதி போதிய ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் நன்கொடைதாரர்கள் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோயிலின் வருமானம் கோடிக்கணக்கான ரூபாய் உள்ள நிலையில் கோயிலின் உள்புறம் போதுமான மண்டப வசதி இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம்.திருவிழா காலங்களில் தகரங்களைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக கோயிலின் உட்பிரகாரத்தில் கல் மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar