Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் எழுத்தறிவித்தல் சிறப்பு நிகழ்ச்சி காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
06:02

குன்றத்துார்; குன்றத்துாரில், பழமைவாய்ந்த திருவிருந்தவல்லி தாயார் சமேத திருஊரக பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்,  மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில், பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழப்பட்டுகின்றனர்.


பழமையான இந்த கோவிலின் ராஜகோபுரம், பெருமாள், தாயார், ராமர், ஆண்டாள், கருடன், துவாரபாலகர், ஆழ்வார், ஆச்சாரியர், ஆஞ்சநேயர், விமானம், கொடிமரம் ஆகியவை, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் இன்று கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, வேத பிரபந்த சாற்றுமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் மற்றும் பொது தரிசனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 9:30 மணிக்கு, சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில், சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் குன்றத்துார், அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதாகார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


வட்டமிட்ட கருடன்; குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்ய கோவிலின் உட்புறமும், வெளியேயும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், கோவிலின் ராஜகோபுரம், மூலவர் சன்னிதிக்கு மேல், கருடன் வட்ட மிட்டு சுற்றி பறந்தது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து, ‘கோவிந்தா… கோவிந்தா…’ என முழுக்கமிட்டு வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar