சப்தவிடங்களில் ஒன்றான நாகை காயரோகண சுவாமி கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 12:02
நாகை; நாகையில் சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற பெற்ற காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பெருவிழா கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதற்காக 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இன்று காலை 6,ம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி தீபாரதனை முடிவுற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது சிவ வாத்தியங்கள் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் காயரோகண சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிவன் மற்றும் அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.12, ஆண்டுகளுக்குப்பின் நம்பியார்நகர் மீனவ கிராமம் தலைமையில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற, நீலாயதாட்சி அம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வேண்டி, தரிசனம் செய்தனர்.