Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ... பண்ருட்டி முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பண்ருட்டி முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியின் முதல் முருகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
நீலகிரியின் முதல் முருகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
03:02

குன்னூர்; வெலிங்டன், பாலசுப்ரமணிய சுவாமி கோவில், கோதண்டராமர் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன், பேரக்ஸ் கன்டோன்மென்ட், 1853ல் உருவான போது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலும், முதற்படியாக மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபத்துடன் கட்டப்பட்டது. 1903ல் மணிமண்டபம், விநாயகர் மற்றும் சிவபெருமான் சன்னதிகளும், 1933ல் மகா மண்டபமும் கட்டப்பட்டன. 1978 ல் மூலவரின் திருவுருவம், பாலசுப்ரமணிய சுவாமியின் மூலவர் ஸபாலதண்டாயுதபாணியாக மாற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,1995, 2009 ஆண்டுகளில் மஹா கும்பாபிஷேகம் நடந்தன. தற்போது, கோவிலின் முன்புறம், விநாயகர், பைரவருக்கு புதிய மண்டபம், மகா மண்டபத்தின் உட்புறம் புதிய கொடிமரம், அன்னதானக்கூடம் திருப்பணிகள் நடந்தன. 

நீலகிரியின் முதல் முருகர் கோவில் என அழைக்கப்படும் வெலிங்டன், பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில்,  இன்று காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, விநாயகர் வழிபாடு, துவார பூஜை, கிப்சூரிய பூஜை, தத்துவர்த்தனை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், திரவிய சமர்ப்பணம், பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. தொடர்ந்து அருகில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களில் கோதண்டராமர். சீதா, லட்சுமணன், அனுமன் அருள்பாலித்தனர். இந்த இரு விழாக்களிலும், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் வினித் பாபா சாஹிப் லோட்டே, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் சங்கீதா, வாரிய பொறியாளர் சுரேஷ், வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஊட்டி எல்க்ஹில் முருகர் கோவில் அர்ச்சகர் திருஞானசம்பந்த சிவம், கோதண்ட ராமர் கோவில் திருப்பதி திருமலா தேவஸ்தான பாஞ் ராத்ர ஆகம வித்வான் நரசிம்மதி பட்டர், ஆகியோர், விழா சர்வ சாதகங்களை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறையினர், திருப்பணிக்குழுவினர், விழா குழுவினர், திருப்பணி உபயதாரர்கள், ஊர் மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா இன்று(26ம் தேதி) வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் கோவிலில் நடந்த கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. தங்க கவச ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதிகளில் முதல் கோவிலான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி கோயில் குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar