Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலின் தலைமை ... தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை, புறநகர் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னை, புறநகர் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
12:02

சென்னை; முருகனுக்கு விசேஷ நாளான தைப்பூசம், சென்னை, புறநகர் கோவில்களில் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடபழனி முருகன் கோவில், குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரிமுனை கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி உள்ளிட் கோவிலில் அதிகாலையில் பூஜை துவங்கியது.  ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி, அலகு குத்தி வந்து, தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


காஞ்சிபுரம்; தைப்பூசத்தையொட்டி காஞ்சிபுரம், செவிலிமேடு, ஜெம் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு, நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 13 அடி உயரமுள்ள பத்துமலை முருக பெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.


அன்னதான பூஜை; சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், அருட்பெருஞ்ஜோதி ஜீவா அழகரசன் இல்லத்தில், 23வது ஆண்டு தைப்பூச அன்னதான பூஜை, நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. மதியம் 12:15 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது. 


தங்க கவச அலங்காரம்; காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில் உள்ள பழநி ஆண்டவர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


சிறப்பு அபிஷேகம்; குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். செவிலிமேடு காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்தார்.


ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்; காஞ்சிபுரம் சி.என்.அண்ணாதுரை தெருவில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபையில், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றமும் நடந்தது. இரவு 7:15 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. இதில், சின்ன காஞ்சிபுரம் மற்றும் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


வல்லக்கோட்டை; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முலவர் மலர் அலங்காரத்திலும், பழ வகைகளில் அலகரிக்கப்பட்ட சஷ்டி மண்டபத்தில், உற்வசர் ரத்தி அங்கி சேவை மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


குன்றத்துார்; குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், நடைபயணமாக வந்தும், பக்தர்கள் வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், கோவில் மலை குன்றில் இருந்து அடிவாரம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.


வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். வழக்கமாக, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களை மூன்று வரிசையாக பிரித்து சுவாமியை தரிசனம் செய்ய அனுப்புவர். நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஒரே வரிசையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்ததால் நெரிசல் அதிகமானது. மேலும், போலீசார் ராஜகோபுர இரும்பு கேட்டை பூட்டி, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே கேட்டை திறந்து, பக்தர்களை அனுமதித்தனர். இதனால், வெயிலில் காத்திருந்து பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ராஜகோபுரத்தில் கேட்டை பிடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு மயான பூஜை நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்திற்கான ... மேலும்
 
temple news
அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar