பதிவு செய்த நாள்
12
பிப்
2025
01:02
திருக்கனுார்; செட்டிப்பட்டு முருகன் கோவில் தைப்பூச விழாவில், பக்தர்களுக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், 53ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஜோடித்து, சுவாமிக்கு காவடி எடுத்து வந்து, பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு, மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், செடல் உற்சவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அலகு குத்தி டயர் வண்டி இழுத்தல், வேல் அணிந்து வருவது, தேர் இழுத்தல் வழிபாடுகள் நடந்தது. இதேபோல்,செல்லிப்பட்டில் செல்வ முருகன் கோவிலில் 58ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, தீமிதி உற்சவம் நேற்று நடந்தது. காலை 5:00 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மேல்தீமிதி, காவடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது.