Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு ... பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை அகத்தில் காணலாம்; பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேச்சு
எழுத்தின் அளவு:
இறைவனை அகத்தில் காணலாம்; பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேச்சு

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
10:02

அன்னூர்; இறைவனை அகத்தில் காணலாம், என, அன்னூரில் நடந்த ஆன்மீக வகுப்பில் பேரூர் ஆதீனம் பேசினார்.


அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகக் குழு சார்பில், சிவன் அருள் தியானம் மற்றும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி வகுப்பு நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், "அப்பரடிகள் பாடுகையில், காற்று, ஆகாசம் என எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறுகிறார். சோழ நாட்டு கோவில்களில், 100, 500, 1000 கால் மண்டபங்zகள் உள்ளன. கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு இந்த மண்டபங்களில் அமர்ந்து இறைவன் நாமத்தை கூற வேண்டும். கோவிலுக்கு அதிகாலையில் செல்ல வேண்டும். கோவிலில் உழவாரப்பணி செய்ய வேண்டும். தினமும் நமச்சிவாயா அல்லது சிவாய நம என்னும் மந்திரத்தை சத்தமாக ஏழு முறை, மெதுவாக ஏழு முறை, மனதிற்குள் ஏழு முறை கூற வேண்டும். வாய்ப்பிருக்கும்போதும் எல்லாம் இந்த நாமத்தை கூற வேண்டும். இறைவன் நம் அகத்தில் உள்ளான். நமக்குள் உள்ள தெய்வீக தன்மையை வெளிப்படுத்த நாம ஜெபம் முக்கியம். 500 ஆண்டுகள் பழமையான பேரூர் மடம் சார்பில் பாழடைந்த பல கோவில்களில் திருப்பணி செய்யப்படுகிறது. இதுவரை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்," என்றார். ஆன்மீக பேச்சாளர் சரவணன், தியானம், இறைவழிபாடு, நாம ஜெபம் குறித்து பேசினார். திரளான பக்தர்கள், திருவாசகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாகச் சென்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும் புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை ... மேலும்
 
temple news
கோவை; கோவை, கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, பூச்சாட்டு விழா நடந்தது. கோவையின் காவல் தெய்வமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar