Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி, அம்மன் புறப்பாடு : இன்று ... பழநி வந்த இடைப்பாடி பக்தர்கள்; இரவில் தங்கி சுவாமி தரிசனம் பழநி வந்த இடைப்பாடி பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 12ல் தோரோட்டம்
எழுத்தின் அளவு:
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 12ல் தோரோட்டம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
10:02

உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் நடைபெறுகிறது. மார்ச் முதல் தேதி கொடியேற்றம் நடக்கிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு மாசி மக தேரோட்டம் நடத்த ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள், பொதுமக்களும் முடிவு செய்தனர். அதன்படி மார்ச் முதல் தேதியில் கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அனைத்து சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும் . மார்ச் 12 ல் தேராட்டம் நடைபெறுகிறது.


சேதமடைந்த தேரோட்ட வீதி; தேரோடும் வீதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கென வடக்கு, கிழக்கு,மேற்கு ரத வீதிகள் பள்ளம்தோண்டியதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு பராமரிப்பிற்கென ரூ.2.78 கோடி அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ரோடு பராமரிப்பு பணி துவங்கவில்லை. பைப் லைன் பதித்துள்ள பகுதியில் ஆர்.சி.பணியை தற்போது துவக்கி உள்ளனர். இப் பணிமுடிந்த பின் ரோடு அமைக்கப்படும். மார்ச் 12ல் தேரோட்ட தேதி நிர்ணயித்து நிலையில் ரோடு மோசமாக இருப்பதால் மண்டகப்படி எப்படி நடத்துவார்கள் என்பது தெரியவில்லை.


தனி செயல் அலுவலர் இல்லை; கோயில் செயல் அலுவலர் இளஞ்செழியன் பணி ஓய்வு பெற்று சென்ற பிறகு, இக் கோயிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கவில்லை. ஆண்டிபட்டி செயல் அலுவலர், கம்பம் செயல் அலுவலர் என பலர் பொறுப்பில் இருந்தனர். தற்போது பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் செயல் அலுவலர் சுந்தரி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர் பராமரிப்பு பணி செய்யவில்லை. ரோடு பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ரோடு அமைக்க மதிப்பீடு தயாரித்தல், டெண்டர் கோருதல், நிர்வாக அனுமதி பெறுதல், வேலை அனுமதி வழங்குதல் போன்ற பணிகளை பேரூராட்சி தரப்பில் மேற்கொண்டதாக தெரியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
சோளிங்கர்; சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது.இந்த ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், துர்கா ஸ்டாலின் நேற்று மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்; சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. மலை அடிவாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar