Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆகாசராயர் கோவில் திருப்பணிகள் ... ஈஷாவில் யக்ஷா கலைத்திருவிழா: பரவசத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள் ஈஷாவில் யக்ஷா கலைத்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா நாளை முதல் துவக்கம்
எழுத்தின் அளவு:
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா நாளை முதல் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
12:02

தேவதானப்பட்டி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை முதல் துவங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்.


தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில். இக்கோயிலில் மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாரதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை.‌ குடங்களில் நிறைந்து காணப்படும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை. பகலிரவு அணையாத நெய்விளக்கு எரிகின்றது. தினமும் மாலை உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க சாயரட்சை பூஜை நடக்கிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கு ஏராளமானோர் வந்து செல்வர். பிப்.4ல் கொடிமரம் நடப்பட்டது. நாளை பிப்., 26 முதல் திருவிழா துவங்கி மார்ச் 5 வரை 8 நாட்கள் நடக்கிறது. 


பஸ் வசதி: நாளை முதல் பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலகுண்டு பகுதியிலிருந்து தலா 5 பஸ்கள் வீதம், 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 24 மணி நேரம் பஸ் வசதி. தற்காலிக பஸ் டெப்போ கோயில் அருகே அமைக்கும் பணி நடக்கிறது. பஸ்கள் தேவதானப்பட்டி அரிசி கடை வழியாக கோயிலுக்கு சென்று, அட்டணம்பட்டி பிரிவு வழியாக வெளியேற வேண்டும். 82 தூய்மை பணியாளர்கள், 4 மேற்பார்வையாளர்கள் குழு அமைத்து சுழற்சி முறையில் தூய்மை பணி, மருத்துவக்குழு, தடையில்லா மின்சாரம், கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து சுழற்சி முறையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிக்பாக்கெட் திருடர்கள், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நூதன பெண் திருடர்களை பிடிக்க 24 மணி நேரம் மப்டியில் ஆண், பெண் போலீசார்கள் 20 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.ஏற்பாடுகளை செயல்அலுவலர் வேலுச்சாமி செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்சி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் மாசி சிவராத்திரி திருவிழாவுக்கு சுவாமி, அம்மன் வீதி உலாவின் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, மாசி மாதம் நடைபெறும். அதன்படி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar