Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டிய வரம் அளிக்கும் ஷீரடி ... மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா நாளை முதல் துவக்கம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகாசராயர் கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்க பக்தர்கள் தீர்மானம்
எழுத்தின் அளவு:
ஆகாசராயர் கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்க பக்தர்கள் தீர்மானம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
12:02

அவிநாசி; அவிநாசி தாலுகா, வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ ஆகாசராயர் கோவில் உள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் வரலாற்று தொடர்புடைய கோவில் இது. கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கி கடந்த ஒன்றரை ஆண்டாகியும் மந்த நிலையில் உள்ளது.


உள்பிரகாரத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவருடன் கூடிய அலங்கார வளைவு ஒரு சமூகத்தினருக்கு எதிரானது என்ற பொய்ப்பிரசாரமும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று புதுப்பாளையம், கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், ராயம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோவிலில் கூடி ஆலோசித்தனர். ‘‘காத்தவராயர் சன்னிதி முன்பு தீர்த்தம் தெளித்து உத்தரவு பெற்று சென்று கிடா வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது, விருந்து தயாரிப்பது என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளது. இந்த நடை முறை அனைத்து சமுதாயத்துக்கும் உண்டான பொது உரிமை. இதை யாரும் தடுக்கவும் இல்லை. தடுக்கவும் முடியாது. இரவு நேரங்களில் கோவில் மண்டபங்களில் மக்கள் கூட்டமாக தங்கும் சமயத்தில் பாதுகாப்பு கருதி கோவிலின் துாய்மை மற்றும் அதன் புனிதம் காக்கும் வகையில் அறநிலையத்துறை அனுமதியின் பேரில் காம்பவுண்ட் சுவர் கட்டப்படுகிறது. இதை தீண்டாமைச்சுவர் என சிலர் விஷமத்தை விதைக்கின்றனர். ‘‘கோவிலில் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்திட அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுக்கக்கூடிய வகையில் அறங்காவலர்கள் நியமனத்தை போர்க்கால அடிப்படையில் அறநிலையத்துறை நிர்வாகம் செய்ய வேண்டும். கோவில் பற்றி வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


ஒவ்வொரு கிராமப் பகுதியில் இருந்தும், ஐந்து பிரதிநிதிகள் என்ற வகையில் இணைந்து திருப்பணிகள் அனைத்தும் நடைபெற்று கும்பாபிஷேகம் விரைந்து நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கிராம மக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar