பதிவு செய்த நாள்
26
பிப்
2025
11:02
பவ்லடம்; பல்லடம் அங்காளம்மன் கோவில், 50ம் ஆண்டு குண்டம் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் விழா கொண்டாடப்பட்டு நடப்பு ஆண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. குண்டம் விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7.00 பணிக்கு கொடியேற்ற விழா நடந்தது. இதனையடுத்து, இரவு, 7.00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவ மூர்த்தியாக எழுந்தருளிய அங்காளம்மன், கோவிலை சுற்றி வலமாக வந்தார். இதனை தொடர்ந்து, யாகசாலை பூஜை துவங்கியது. இரவு, 10.00 மணிக்கு முகப்பள்ளம் மயான பூஜை நடந்தது. இன்று இரவு, 7.30க்கு திருக்கல்யாண உற்சவமும், நாளை காலை, 7.00 பணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.