Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ... அம்மையார் குளத்தில் களிமண் சிவ லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை அம்மையார் குளத்தில் களிமண் சிவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; இரவு முழுவதும் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; இரவு முழுவதும் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
10:02

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்களின் ருத்ர ஜபத்துடன் மகா சிவராத்திரி விழா இரவு முழுவதும் நடந்தது.


திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. காலை மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜைகளுடன் மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யோகேஷ்வரி சமேத அந்தகாசூர சம்காரமூர்த்தி ஆலய பிரதட்சனமாக வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 3:00 மணிக்கு நான்காம் கால பூஜை என நான்கு கால பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு காலத்திற்கும் மூலவருக்கு பலவித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. சிவபக்தர்கள் ஸ்ரீருத்ரம் ஜபம், சிவபுராணம் வாசிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாதஸ்வர இன்னிசை, திருவருட்பா இசையமுது, பரதநாட்டியம், உடல் வாத்தியம், சிவ பஜனை என இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar