மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2025 11:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதி மதனம்பாளையம் தெருவில் காமாட்சி அம்பிகை சமேத மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில், சிவராத்திரியையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் நேற்று முன்தினம் இரவு நான்கு கால சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து லட்சதீபம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் அகல்விளக்கில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். உற்சவர் காமாட்சி அம்பிகையும், மகா ருத்ரேஸ்வரரும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.