Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் ... மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2025
11:02

துாத்துக்குடி:திருச்செந்துாரில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப். 28) நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ரவி விமானம் மூலம் நேற்று துாத்துக்குடி வந்தார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அவரை வரவேற்றார். பின்னர், கார் மூலம் திருச்செந்துார் சென்ற அவர், கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதிக்கு சென்றார். கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். கோவில் முன் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கடல் நீரில் அவர் தீர்த்தம் எடுத்து கொண்டார். அய்யா வைகுண்டர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி, 5 முறை கோவில் பள்ளியறையை (கருவறை) சுற்றி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் அய்யா வைகுண்டரின் புகைப்படத்தையும், விளக்கு ஒன்றையும் வழங்கி கௌரவித்தனர். வெளியே வந்த ஆளுநருடன் கோவில் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆளுநர் வருகையே முன்னிட்டு திருச்செந்துார் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


திடீர் பரபரப்பு: கோவிலுக்கு வந்த ஆளுநர் ரவி அங்குள்ள அறையில் உடை மாற்றுவதற்காக சென்றார். அவர் இருந்த அறைக்கு அருகே இருந்த ஜெனரேட்டர் அறையில் இருந்து திடீரென பயங்கர சத்தத்துடன் புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் ஜெனரேட்டர் மெயின் சுவிட்சை அணைத்ததால் புகை குறைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில், கோவிலில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே ... மேலும்
 
temple news
மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. ஒற்றுமை, ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், ... மேலும்
 
temple news
பல்லடம்; சிவராத்திரி, அமாவாசை மற்றும் குண்டம் திருவிழா என, பல்லடம் வட்டார கோவில்களில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar