Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம் குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இரண்டாம் நாள் கச்சேரி
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இரண்டாம் நாள் கச்சேரி

பதிவு செய்த நாள்

10 மார்
2025
11:03

பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, நந்தினி மற்றும் ஆனையடி பிரசாத் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு, நடப்பாண்டு மாசி மாத ஏகாதசி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றப்பட்டது. உற்சவத்தினை, நேற்று முன்தினம் பிரபல இசைக்கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்து, சங்கீத கச்சேரி நடத்தினார். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீதக் கச்சேரி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று மாலை, 6:30 மணிக்கு நந்தினியின் சங்கீதக்கச்சேரி நடந்தது. இவருக்கு பாலக்காடு சுவாமிநாதன் (வயலின்), பாலக்காடு மகேஷ்குமார் (மிருதங்கம்), ஆலுவா ராஜேஷ் (கடம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து, 7:30 மணிக்கு ஆனையடி பிரசாத்தின் சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. ஏகாதசி உற்சவ நாளான இன்று (10ம் தேதி) காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பத்மேஷின் புல்லாங்குழல், பாதிரியார் பவுல் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரி, 9:30க்கு அனுாப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரியும் நடக்கிறது. நாளை (11ம்) ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar