திருப்புத்தூர் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2025 10:03
திருப்புத்தூர்; திருப்புத்தூர் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயில் முதலாமாண்டு வருடாபிஷேக விழா நடந்தது. திருப்புத்தூரின் காவல் தெய்வமாக கருப்பர் கிழக்கு திசையில் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் 2024 பிப்.21ல் நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமம், மற்றும் வாஸ்துசாந்தியுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, மூலவருக்கு புனித நீரால் வருடாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மேலும் சங்கிலி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை அறங்காவலர் குழுத் தலைவர் வைரவன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.