Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருளைக்கிழங்கில் கடவுளின் வடிவம்; ... மாசி மகம்; புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்..! மாசி மகம்; புனித நீராடி வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காளாத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 மார்
2025
05:03

உத்தமபாளையம்; உத்தமபாளையத்தில் இன்று நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை காளாத்தீஸ்வரர் - ஞானம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். 


உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. ராகு, கேது தம்பதியருடன் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள கோயில் . தென் காளஹஸ்தி என்றழைக்கப்படுகிறது. இந்த கோயில் தேரோட்டம் 2020 க்கு நடைபெறவில்லை. நாளை காலை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. வெண் பட்டில் காளாத்தீஸ்வரரும், பச்சைப்பட்டில் ஞானாம்பிகையும் சர்வ அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர். விசேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க , காலை 11.30 மணியளவில் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கழுத்தில் மங்களநாண் சூடினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ என கோஷமிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமியும், அம்பாளும் ஊர்வலமாக இங்குள்ள கர்ணம் வீட்டிற்கு சென்று பாழும் , பழமும் சாப்பிட்டு பின் நகர் வலம் வந்தனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை உத்தமபாளையம் கர்ணம் குடும்பத்தாரும், கோகிலாபுரம் கிராமத்து பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர். இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறுகின்றனர். காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தேரோட்டம் துவங்குகின்றது. தேரோட்டம் நடைபெறுவதையொட்டி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar